Don't Miss!
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜல்மித்ரா திட்டம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பொறுப்பில்லாமல் பேசிய சூப்பர் ஸ்டார் மனைவி: கொந்தளித்த மக்கள்
மும்பை: பொறுப்பில்லாமல் கருத்து தெரிவித்த நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
மும்பையில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். இதையடுத்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மும்பை மாநகராட்சி இடித்து வருகிறது.
இது குறித்து பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியிடம் கருத்து கேட்கப்பட்டது.
மக்கள் தொகை
மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு நகரிலும் இத்தனை பேர் தான் வசிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை தாண்டிவிட்டால் அவர்களை வேறு நகருக்கு அனுப்ப வேண்டும் என்றார் ஹேமமாலினி.
|
கொந்தளிப்பு
மும்பை தீ விபத்து குறித்து ஹேமமாலினி தெரிவித்துள்ள கருத்தை கேட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஹேமாவை விளாசித் தள்ளியுள்ளனர்.
|
மவுனம்
ஒரு எம்.பி.க்கு என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தெரியாவிட்டால் அமைதியாக இருப்பது நல்லது. ஹேமமாலினியின் சர்ச்சை கருத்து பற்றி கூறுகிறேன் என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
|
தெரியாது
அவர் ஒரு ஜீனியஸ் என்பது தெரியாமல் போய்விட்டது
|
வெளியேற்றம்
தயவு செய்து அவரை மும்பையை விட்டு வெளியேற்றவும் என ஒருவர் கடுப்பில் ட்வீட்டியுள்ளார்.