மன்னிப்புதானே., "இந்தா எடுத்துட்டு போ" ங்குற மாதிரி இருக்கு ஆண்டவரே
சென்னை: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை கூறிய கமல் ஹாஸனுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்த கமல் ஹாஸன் கேரளாவில் மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து மன்னிப்பு கேட்கவும் தயார் என்று கமல் ட்விட்டரில் தெரிவித்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,
தோப்பு
பதிலோ மன்னிப்போ 'நீர்' ஏன் கோர வேண்டும்?? காய்த்த மரம் தான் கல்லடிபடும்..நீங்கள் பலருக்கு ஆப்பு வைத்த தோப்பு 😉? #WeSupportKamal #BiggBoss
மன்னிப்பு
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. என்னமோ இந்த உலகிற்கு அந்த பெண் யார் என்று தெரியாதது போன்றும், நீங்கள் தான் கூறியது போன்றும் பேசுகிறார்கள். என்ன நாடகம் இது.
தமிழன்
தமிழன அடுத்தவன் கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கிறதே உங்க வேலையாடா????அன்று சத்தியராஐ் இன்று கமல்!!!! தலைவா நாங்கள் இருக்கிறோம்...கவலை வேண்டாம்.
நடிகை
ஏற்கெனவே யார் அந்த நடிகை என்று உலகமெலாம்அறியும்படிச் செய்துவிட்டு இன்றுபுதிதாய்கமல் ரகசியத்தைவெளி கொண்டுவந்ததுபோல்கேள்வி கேட்பதுநன்றாகஇல்லையே
போ
மன்னிப்புதானே., "இந்தா எடுத்துட்டு போ" ங்குற மாதிரி இருக்கு ஆண்டே 😂


Click it and Unblock the Notifications











