எப்ப பார்த்தாலும் நெஞ்சுவலின்னு, வயிறு வலி, தலைவலின்னு மாத்துங்க: கருணாஸை கலாய்க்கும் மக்கள்
சென்னை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு தேவர் பேரவையை சேர்ந்த முத்தையாவின் காரை சேதப்படுத்திய வழக்கில் கருணாஸை கைது செய்ய திட்டமிட்டு நெல்லை போலீசார் சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர் நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படங்கள்
சினிமா படங்களில் அரசியல்வாதிகள், பிரபலங்களை போலீசார் கைது செய்ய வந்தால் உடனே நெஞ்சு வலிக்கிறது என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிடுவார்கள். கருணாஸும் நெஞ்சுவலி என்று கூறியிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். கருணாஸ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளதால் நெஞ்சுவலி காட்சியை கச்சிதமாக பயன்படுத்துவாக கிண்டல் செய்கிறார்கள்.
கருணாஸ்
எது மாறினாலும் இந்த நெஞ்சு வலி மேட்டர் மட்டும் மாறவே மாட்டேங்குதே
நடிகர்
கருணாஸ் நெஞ்சுவலி என்று கூறியுள்ளதை நடிப்பாக பார்க்கிறார்கள் மக்கள்
பயம்
திருநெல்வேலி போலீசாரின் அடிக்கு பயந்து கருணாஸ் மருத்துவமனையில் படுத்துள்ளதாக கலாய்க்கிறார்கள்.
மாத்துங்க
நம்பியார் காலத்து டெக்னிக்கை இன்னுமா பயன்படுத்துவது?
வயிறு வலி
எப்ப பார்த்தாலும் நெஞ்சு வலின்னு, வயிறு வலி, தலைவலின்னு மாத்துங்க, போர் அடிக்கிறது


Click it and Unblock the Notifications











