நான் இறந்தால் இந்த போட்டோவை வைத்து தான் பூஜை செய்யணும்: சூப்பர் ஸ்டார் மனைவி
மும்பை: தான் இறந்த பிறகு இந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து மாலை போட வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா தன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் புகைப்படம் வெளியிடுவது புதிது அல்ல. ஆனால் அந்த போஸ்ட்டில் அவர் எழுதியிருப்பது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தான் இறந்த பிறகு அந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ட்விங்கிள்
நான் இறந்த பிறகு இந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து மாலை போட்டு பிரார்த்தனை செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி தன்னுடைய பயங்கரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ட்விங்கிள்.

ரசிகர்கள்
ட்விங்கிள் கன்னாவின் கோரிக்கையை பார்த்த ரசிகர்களோ, என்ன மேடம் அழகான புகைப்படத்தை ஃபிரேம் செய்யச் சொல்லாமல் இதை போய் சொல்கிறீர்களே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அக்ஷய்
ட்விங்கிள் கன்னா வித்தியாசமானவர். அடிக்கடி அக்ஷய் குமாரை இப்படி கலாய்த்து ஏதாவது போஸ்ட் போடுவார்.
ரன்வீர் சிங்
என்னம்மா இப்படி கலாய்க்கிறீங்களேம்மா, அந்த மனுஷன் பாவம்.


Click it and Unblock the Notifications











