Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கிரிக்கெட் சூதாட்டம்- ஸ்ரீசாந்தின் கதை சினிமாவாகிறது!
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறதுய. அந்த படத்துக்கு 'கிரிக்கெட்' என்றே பெயரிட்டுள்ளனர். மலையாளத்தில் முன்னணி படத் தயாரிப்பாளர்கள் சாஜி கைலாஸ், ஏ.கே.சாஜன் இருவரும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். கதை- வசனத்தை சாஜன் எழுதுகிறார்.
இதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்துவிட்டன. கிரிக்கெட் கதை பற்றி படத் தயாரிப்பாளர் சாஜி கைலாஸ் கூறுகையில், "இது ஸ்ரீசாந்தின் கதைதான். கேரள இளைஞன் ஒருவன் பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆல்- ரவுண்டராக இருக்கிறான். கடின உழைப்பால் உச்சத்துக்கு வருகிறான்.
புகழ்பெற்ற பிறகு பேராசை காரணமாக அவன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான். இதனால் வாழ்க்கையில் கடை மட்டத்துக்கு தள்ளப்படுகிறான். இதைத்தான் படமாக தயாரிக்கப் போகிறோம்.
ஸ்ரீசாந்தின் இந்த செயலால், ரோல் மாடலாக இருக்க வேண்டிய அவர், தன்னைத்தானே அழித்துக் கொண்டுள்ளார். இதற்கு பேராசையே காரணமாகும். இதற்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீசாந்த் மட்டுமே இதற்கு பொறுப்பு. இன்றைய இளைஞர்கள் தங்கள் லட்சியத்தை நிறை வேற்ற இப்படி மாறி விடுகிறார்கள்.
இதனை கற்பனைக் கதை என்றெல்லாம் கூறாமல், கிரிக்கெட் படத்தில் நேரடியாகவே சொல்லப் போகிறோம்," என்றார்.