Don't Miss!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கிரிக்கெட் சூதாட்டம்- ஸ்ரீசாந்தின் கதை சினிமாவாகிறது!
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறதுய. அந்த படத்துக்கு 'கிரிக்கெட்' என்றே பெயரிட்டுள்ளனர். மலையாளத்தில் முன்னணி படத் தயாரிப்பாளர்கள் சாஜி கைலாஸ், ஏ.கே.சாஜன் இருவரும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். கதை- வசனத்தை சாஜன் எழுதுகிறார்.
இதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்துவிட்டன. கிரிக்கெட் கதை பற்றி படத் தயாரிப்பாளர் சாஜி கைலாஸ் கூறுகையில், "இது ஸ்ரீசாந்தின் கதைதான். கேரள இளைஞன் ஒருவன் பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆல்- ரவுண்டராக இருக்கிறான். கடின உழைப்பால் உச்சத்துக்கு வருகிறான்.
புகழ்பெற்ற பிறகு பேராசை காரணமாக அவன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான். இதனால் வாழ்க்கையில் கடை மட்டத்துக்கு தள்ளப்படுகிறான். இதைத்தான் படமாக தயாரிக்கப் போகிறோம்.
ஸ்ரீசாந்தின் இந்த செயலால், ரோல் மாடலாக இருக்க வேண்டிய அவர், தன்னைத்தானே அழித்துக் கொண்டுள்ளார். இதற்கு பேராசையே காரணமாகும். இதற்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீசாந்த் மட்டுமே இதற்கு பொறுப்பு. இன்றைய இளைஞர்கள் தங்கள் லட்சியத்தை நிறை வேற்ற இப்படி மாறி விடுகிறார்கள்.
இதனை கற்பனைக் கதை என்றெல்லாம் கூறாமல், கிரிக்கெட் படத்தில் நேரடியாகவே சொல்லப் போகிறோம்," என்றார்.