Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல நடிகர் திலீப் குமாரைக் 'கொன்ற' ட்விட்டரும் வாட்ஸ்ஆப்பும்!
மும்பை: பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் (91) உடல் நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானதாக ட்விட்டரிலும் வாட்ஸ்ஆப்பிலும் தீயாய் பரவி வருகின்றன வதந்திகள்.
ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தன் கணவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் திலீப் குமாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அங்கு அவர் காலமானதாகவும் ட்விட்டரில் செய்திகள் பரவ, பாலிவுட்டே பதறிப் போனது.
ஆனால் பின்னர் விசாரித்ததில், திலீப் குமார் நலமுடன் வீட்டிலிருப்பது தெரிய வந்தது. யாரோ ஒருவர் திலீப் குமார் பற்றிய பழைய ட்வீட் ஒன்றை ரிட்வீட் செய்ய, அதுவே இந்த வதந்திக்கு காரணமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப்பிலும் இதே கதைதான்.
சில தினங்களுக்கு முன் ஹைதராபாதில் நடந்த சல்மான்கானின் தங்கை திருமணத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பினார் திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.