twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீடியோ எடுத்து நடிகரை மிரட்டி பணம் பறித்த 2 நடிகைகள் கைது

    By Siva
    |

    மும்பை: மராத்தி பட நடிகரை மிரட்டி பணம் பறித்த 2 நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மராத்தி பட நடிகர் சுபாஷ் யாதவ்(28) என்பவரும் ரோகினி மானே என்கிற நடிகையும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். யாதவுக்கு ரோகினியை பிடித்துவிட்டது. ஆனால் ரோகினிக்கு யாதவை பிடிக்கவில்லை.

    இந்த காரணத்தால் ரோகினி யாதவிடம் இருந்து தள்ளித் தள்ளி சென்றுள்ளார்.

    போலீஸ்

    போலீஸ்

    சுபாஷ் யாதவ் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக ரோகினி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை திரும்பப் பெறுமாறு கூறி சுபாஷ் யாதவ் தன்னை மிரட்டுவதாகவும், அடித்ததாகவும் ரோகினி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ரோகினி

    ரோகினி

    சமூக வலைதளத்தில் சுபாஷ் தன்னை அசிங்கப்படுத்துவதாக ரோகினி போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பிறகு மராத்தி திரையுலகினர் இந்த விஷயத்தில் தலையிடவே சுபாஷ் ரோகினியிடம் மன்னிப்பு கேட்டார்.

    மிரட்டல்

    மிரட்டல்

    ரோகினி தனது தோழியான நடிகை சாராவுடன் சேர்ந்து சுபாஷை ஒரு இடத்தில் சந்தித்து புகாரை வாபஸ் பெற ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் குடும்ப மானத்தை கப்பல் ஏற்றிவிடுவோம் என்று அந்த நடிகைகள் சுபாஷை மிரட்டியுள்ளனர்.

    கைது

    கைது

    சுபாஷின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் சில வீடியோக்களை அந்த நடிகைகள் எடுத்துள்ளனர். நடிகைகள் மிரட்டிய பிறகு சுபாஷ் ரூ. 1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை தர மறுத்துள்ளார். நடிகைகள் ரோகினி, சாரா, போலீஸ் அதிகாரி அமோல் விஷ்ணு தகலே மற்றும் ராம் ஜக்டலே ஆகியோர் தன்னை மிரட்டுவதாக சுபாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகைகளை கைது செய்துள்ளனர்.

    English summary
    Police arrested two marathi actresses for trying to extort money from an actor in Maharashtra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X