Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பேண்ட் ஜிப்பை கழற்றி பாடகியை ஒரு விஷயம் செய்யச் சொன்ன இசை அமைப்பாளர்
மும்பை: இசையமைப்பாளர் அனு மாலிக் தங்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக இரண்டு பாடகிகள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் இசையமைப்பாளர் அனு மாலிக் தனக்கு 15 வயது இருந்தபோது முத்தம் கேட்டதாக பாடகி ஸ்வேதா பன்டிட் புகார் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 2 பெண்கள் அனு மாலிக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு பாடகி கூறியிருக்கும் விபரங்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அனு மாலிக்
1990ம் ஆண்டு மெஹ்பூப் ஸ்டுடியோஸில் அனு மாலிக்கை சந்தித்தபோது அவர் என் மீது மோதிவிட்டு மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக நாங்கள் மீண்டும் சேர்ந்து பணியாற்றினோம். அப்போது அவர் என்னை தன் வீட்டிற்கு வரவழைத்தார். சோபாவில் என் அருகில் வந்து அமர்ந்தார். வீட்டில் அவரின் குடும்பத்தார் இல்லாததை உணர்ந்த எனக்கு பயமாக இருந்தது என்கிறார் அந்த பாடகி.
மோசம்
சோபாவில் என் அருகில் அமர்ந்த அவர் என் பாவாடையை தூக்கிவிட்டு தனது பேண்ட்டை கழற்றினார். அவரை தள்ளிவிட்டுவிட்டு ஓட நினைத்தேன். ஆனால் அவர் என்னை விட பலமானவராக இருந்தார். என் நல்ல நேரம் அந்த நேரத்தில் யாரோ அழைப்பு மணியை அடித்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட அவர் நடந்தது பற்றி யாரிடமும் கூறக் கூடாது என்றார் என அந்த பாடகி தெரிவித்துள்ளார்.
வீடு
பின்னர் அனு மாலிக் என்னை தன் காரில் வீட்டில் டிராப் செய்தார். என் வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் ஆள் இல்லாத மைதானத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். அந்த மைதானத்தை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு என்னை பார்த்தார். நான் பயந்து போய் எங்கு வந்திருக்கிறோம் என்று அவரிடம் கேட்டேன் என்று அந்த பாடகி தெரிவித்துள்ளார்.
திட்டு
அனு மாலிக் தன் பேண்ட் ஜிப்பை கழற்றிவிட்டு என்னை அவரின் மர்ம உறுப்பில் வாய் வைக்க சொன்னார். நான் மறுக்கவே அவர் என் தலைமுடியை பிடித்து இழுத்து என் முகத்தை அவர் மடியில் வைத்து திட்டினார். அந்த நேரம் மைதானத்தின் காவலாளி வரவே நான் கார் கதவை திறந்து கொண்டு ஓடிவிட்டேன் என்று அந்த பாடகி கூறியுள்ளார்.
சேலை
ஸ்டுடியோவில் அனு மாலிக்கை சந்தித்தேன். அடுத்த முறை வரும்போது ஷிபான் சேலை கட்டி வா என்றார். உனக்கு காதலன் இல்லாததால் தனிமயைில் வாடுவாய் அல்லவா என்றார். அவர் பேச்சை கேட்டு கடுப்பாகி கிளம்ப முயன்ற என்னை கட்டிப்பிடித்தார். அது சவுண்டு ப்ரூஃப் அறை என்பதால் நான் கத்தினாலும் வெளியே கேட்காது என்று மற்றொரு பாடகி தெரிவித்துள்ளார்.