Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நடிகர் நாகேஸ்வரராவ் நினைவாக தபால் தலை வெளியிட அமெரிக்கா முடிவு
நியூயார்க்: மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ் நினைவாக அவரது பிறந்தநாளன்று தபால் தலை வெளியிட்டு கவுரவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தெலுங்குப் பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் அக்கினேனி நாகேஸ்வரராவ். இவர் தமிழில் தேவதாஸ், மாயமலை, சவுடாமணி, மாயக்காரி, காதல், பூங்கோதை, பெற்றதாய், கல்யாணப் பரிசு உள்ளிட்ட பலப் படங்கள் மற்றும் ஏராளமான தெலுங்கு மொழிப்படங்கள் என 256 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் காலமானார்.
இவரது மகன் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கி வருகின்றார்.
விருதுகள்...
தமிழகத்தின் கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசின் நந்தி விருது, சினிமா துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசின் உயரிய பத்ம விபூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார் நாகேஸ்வரராவ்.
தபால் தலை...
இந்நிலையில், மறைந்த நாகேஸ்வர ராவின் நினைவாக அவரைக் கவுரவிக்கும் வகையில் தபால் தலையினை வெளியிட அமெரிக்க தபால் துறை முடிவு செய்துள்ளது.
வெளியீட்டு விழா...
வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி நாகேஸ்வரராவின் பிறந்தநாள். அன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டெல்லாஸ் நகரில் இந்த தபால் தலை வெளியீட்டு விழா நடைபெறும் என அமெரிக்க அக்கினேனி பவுண்டேஷன் அறிவித்துள்ளது.
முதல்முறை...
இந்திய நடிகர் ஒருவருக்கு அமெரிக்கா தலை தபால் வெளியிட்டு கவுரவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்க மகிழ்ச்சி...
இத்தகவலை அறிந்து தானும் தனது குடும்பத்தாரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், தனது தந்தைக்கு அமெரிக்கா அளிக்கும் இந்தக் கவுரவத்திற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் நடிகர் நாகார்ஜூன்.
அக்கினேனி அவார்ட்ஸ்...
மேலும், இந்த தபால்தலை வரும் டிசம்பர் மாதம் 17ந்தேதி ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கவுள்ள இண்டர்நேஷனல் அக்கினேனி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வைத்து இந்தியாவில் வெளியிடப்படும் என அக்கினேனி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?