Don't Miss!
- News இந்தியாவில் அமெரிக்காவின் ’பரம்பரை’ வரி தேவை என பேசிய பாஜக எம்பி.. மோடி பதில் என்ன? சீறும் காங்கிரஸ்
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பாண்டிய நாடு படத்துக்கு யுஏ... விஷால் ஷாக்.. மறு தணிக்கைக்கு முயற்சி!
சென்னை: விஷாலின் பாண்டிய நாடு படத்துக்கு யு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்காத விஷால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளார்.
விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாண்டிய நாடு'. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப் படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது, தியேட்டர்கள் லிஸ்டும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
தீபாவளிக்கு குறைந்தது ஒரு வாரம் முன்பே படங்களின் தணிக்கைச் சான்றிதழைத் தரவேண்டும் என அனைத்து திரையரங்குகளும் கோரிக்கை விடுத்திருந்தன. எனவே படத்தை முன்கூட்டியே தணிக்கை செய்து வருகின்றனர்.
ஆரம்பம் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களுக்கு கடந்த வாரமே தணிக்கை முடிந்து யு சான்றும் கிடைத்துவிட்டது.
ஆனால் பாண்டியநாடு படத்துக்கு நேற்றுதான் தணிக்கை நடந்தது. இந்தப் படத்துக்கு யுஏ சான்று அளித்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் என்பதால் இந்த சான்று.
இதனை விஷாலும் படக்குழுவும் ஏற்கவில்லை. காரணம் யு ஏ சான்றிதழ் பெற்றால் டிவியில் ஒளிபரப்புவது கஷ்டம். வரிவிலக்கும் கிடைக்காது. எனவே மறு தணிக்கைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளனர்.