Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாடகியை பலாத்காரம் செய்வேன் என்று மிரட்டிய உபேர் டிரைவர்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பாடகியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று மிரட்டிய உபேர் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் கிருஷ்ணகோலி திதிகா பானர்ஜி(33). பாடகியான அவரின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாலை தந்தையை பார்த்துவிட்டு திதிகா தனது தாயுடன் உபேர் காரில் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது,
செல்போன்
நான் அசதியாக இருந்ததால் காரில் ஏறியதும் தூங்கிவிட்டேன். திடீர் என்று கண் விழித்தால் ஒழுங்காக காரை ஓட்டுமாறு என் அம்மா கூறிக் கொண்டிருந்தார். டிரைவர் செல்போனில் பேசிக் கொண்டு ஒரு கையில் காரை ஓட்டினார். இதை பார்த்த நான் ஒழுங்காக காரை ஓட்டுங்கள் இல்லை என்றால் வாகனத்தை நிறுத்தி பேசி முடித்த பிறகு ஓட்டுங்கள் என்றேன். அதற்கு டிரைவரோ, நான் ஒரு விரலில் கூட ஓட்டுவேன் என்று திமிராக பதில் அளித்தார். காரை நிறுத்துமாறு நான் கூறியும் அவர் கேட்கவில்லை.
மிரட்டல்
போலீசில் புகார் அளிப்பேன் என்று நான் கூறியதற்கு, உங்களின் விலாசம் என்னிடம் உள்ளது. நான் உங்கள் வீட்டிற்கு அருகில் தான் வசிக்கிறேன். உங்களை பலாத்காரம் செய்வேன் என்றார். கார் மேம்பாலத்தை கடந்த உடன் கண்ணாடியை இறக்கிவிட்டு உதவி கோரி நானும், அம்மாவும் கத்தினோம். எங்களின் குரல் கேட்டு அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தினார்கள்.
டிரைவர்
டிரைவர் ஸ்டீயரிங்கில் கையை எடுத்துவிட்டு விபத்து ஏற்படுத்தி எங்களை கொல்லப் பார்த்தார். எனக்கு டிரைவிங் தெரியும் என்பதால் நான் ஹேன்ட்பிரேக்கை போட்டு காரை நிறுத்தினேன். காரில் இருந்து இறங்கி அந்த டிரைவரை பிடித்து இழுத்து அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீசிடம் ஒப்படைத்தேன்.
கைது
கார் டிரைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தேன். என் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர் என்றார் திதிகா பானர்ஜி. திதிகா பானர்ஜி அளித்த புகாரின்பேரில் உபேர் டிரைவரை கைது செய்ததை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்காக உபேர் நிறுவனம் சார்பில் திதிகாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.