twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதய்கிரண் தற்கொலையில் மர்மம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை

    By Mayura Akilan
    |

    சென்னை: நடிகர் உதய்கிரண் தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை அறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உதயகிரணின் மனைவியிடமும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலைக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததே காரணம் என கூறப்பட்டது. தாயார் மரணம் அடைந்தது, தந்தை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டது போன்றவற்றினாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் செய்திகள் பரவின. ஆனால் உதய்கிரண் தற்கொலையில் மேலும் பல மர்மங்கள் புதைந்து கிடப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

    உதய் கிரணுக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகளுக்கும்தான் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரம் அது ரத்தானது. அதன் பிறகு விசிதாவை மணந்தார். இவர் பேஸ்புக் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கிறார். உதயகிரண் தற்கொலை செய்து கொண்ட போது அவரது மனைவி வீட்டில் இல்லை.

    Uday Kiran: a case of suspicious death, say police

    உதய்கிரண் குடியிருந்த வீட்டின் காவலாளியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உதய்கிரணுக்கும், அவரது மனைவி விசிதாவுக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்றும் குடும்ப வாழ்க்கையில் இருவரும் சந்தோஷமாக இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால் போலீஸ் பார்வை விசிதா பக்கம் திரும்பி உள்ளது.

    தற்கொலை செய்த அன்று இரவு உதய்கிரண் மனைவி விசிதா இரவு விருந்துக்கு சென்றுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ தினத்தன்று கணவனை வீட்டில் இருக்க வைத்து விட்டு இவர் மட்டும் விருந்துக்கு தனியாக போனது ஏன் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    விசிதாவுடன் பணியாற்றும் சக ஊழியர் ரோஹித் என்பவர் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்க சென்றதாக விசிதா கூறியுள்ளார். கணவனையும் ஏன் உடன் அழைத்து செல்லவில்லை. நள்ளிரவு வரை நடந்த அந்த விருந்தில் பங்கேற்றவர்கள் யார் யார் போன்ற விவரங்களையயும் போலீசார் சேகரிக்கின்றனர்.

    இதனிடையே உதய்கிரண் உடலுக்கு நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றது. திரைப்படத்துறை அமைச்சர் அருணா அஞ்சலி செலுத்தினார்.

    உதய்கிரண் தற்கொலை வழக்கில் இன்னும் சில தினங்களில் பல அதிரடி திருப்பங்கள் வெளியாகும் என்கின்றனர்.

    English summary
    Apparently depressed over not getting films, Telugu actor Uday Kiran committed suicide by hanging himself on Sunday night, police said. Kiran, 33, is survived by his wife Vishita. Kiran, who acted in 19 films including three Tamil movies, ended his life in his flat at Srinagar colony
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X