Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உதயநிதியுடன் இணையும் பிரபல இயக்குநர்... இந்த மாதத்தில் சூட்டிங் துவக்கம்?...உண்மையா?
சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் கண்ணை நம்பாதே, ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து கர்ணன் இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படங்களை அடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார் என்று கூறப்படுகிறது.
ராதே ஷ்யாம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படாது... உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்கள்
நடிகர் உதயநிதி ஸ்டாலின்
நடிகர் மற்றும் அரசியல்வாதி என இரண்டு தளங்களில் தன்னை பிசியாக ஈடுபடுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்டாலின், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
கதைக்கு முக்கியத்துவம்
தமிழில் ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் நடித்த உதயநிதி தொடர்ந்து கதைககு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடித்து சிறப்பான நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து சிறந்த கதைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அடுத்தடுத்த படங்கள்
தற்போது மு மாறனின் கண்ணை நம்பாதே மற்றும் அருண்ராஜா காமராஜின் ஆர்ட்டிகிள் 15 இந்தி ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தொகுதி மேம்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
கர்ணன் இயக்குநருடன் உதயநிதி
மேலும் மகிழ் திருமேனியின் பெயரிடப்படாத படத்திலும் நடித்துவரும் உதயநிதி, அடுத்ததாக தனுஷின் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். மேற்குறிப்பிட்ட படங்களின் சூட்டிங்கை முடித்துவிட்டு மாரி செல்வராஜுடன இணைகிறார் உதயநிதி.
ஏஆர் ரஹ்மான் இசை
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உதயநிதிக்கு ஜோடியாகும் கீர்த்தி
படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசிலும் இணைந்துள்ளனர். தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் உதயநிதி, இந்தப் படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.