Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரசியல் களத்தில் பிஸியாக உதயநிதி.. படப்பிடிப்பு பணிகளில் இணைவது எப்போது!?
சென்னை: உதயநிதி ஸ்டாலின் படங்களை தயாரிக்க தொடங்கி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
அடுத்ததாக வெளிவரவுள்ள உதயநிதி ஸ்டாலினின் புதுப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண வரவேற்பில் பங்கேற்ற ஸ்டாலின்.. பரிசு கொடுத்து அசத்தல்!
ரெட் ஜெயன்ட் மூவிஸ்
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்பிலிருந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ்-ஐ தொடங்கி படங்களை தயாரித்து வந்தார். சில வருடங்களாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை.
மீண்டும் தொடக்கம்
உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ஹிந்தி படமான Article - 15 படத்தின் தமிழ் ரீமேக்கிலும், இயக்குனர் பாலா இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதுமட்டுமின்றி ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் மீண்டும் தொடங்கி படங்களை தயாரிக்க உள்ளார்.
படப்பிடிப்பு தளம்
அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் படங்களில் நடிக்க நேரத்தை ஒதுக்கவுள்ளார். முதலில் Article - 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கான வேலைகளை முடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆகஸ்ட் இறுதியில்
கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார். தற்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் வேலைகள் ஓய்வின்றி நடந்து வருகிறது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.