“தவறு மீண்டும் நடக்காது..”... உதயநிதி ஏன் இப்படிச் சொன்னார் தெரியுமா?
தவறு மீண்டும் நடக்காது என உதயநிதி சொல்லியிருக்கிறார்
சென்னை: மீண்டும் தவறு நடக்காது என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இவர் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. அரசியல் பின்னணி உள்ள நடிகர் என்பதால் உதயநிதி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்ப்பை உண்மையாக்கும் வகையில் உடன்பிறப்புக்களும் உதயநிதி புகைப்படத்தை முக்கிய நிகழ்வுகளில் போட்டு மாஸ் காட்டுகின்றனர். அதேபோல், உதயநிதியும் அவ்வப்போது அரசியல் மேடைகளில் தலைகாட்டி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுடன் நடிகர் உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இதைக்கண்ட திமுக கடமடைத் தொண்டர் ஒருவர், உதயநிதி ஒரு திமுக தொண்டனாய் பார்க்கும் போது அருவெறுப்பாய் இருக்கிறது. முன்னணி தலைவர்களின் போட்டோ இடம்பெற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள உதயநிதி, தவறு! மீண்டும் நடக்காது என பதிலளித்துள்ளார். உதயநிதியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











