Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"அவர் படம்னா ஹீரோ ஃப்ரெண்டா நடிக்கக்கூட ரெடி.." - 'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி!
Recommended Video
சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'நிமிர்'. பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வருகிறது.
உதயநிதி ஸ்டாலினுடன் நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திக்ரகனி, டைரக்டர் மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
'நிமிர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
படம் பார்த்ததே இல்லை
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் நடித்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தைகூட பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லையாம். ஆனாலும், என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்திற்கு என்னை நாயகனாக்கியிருக்கிறார்.
திட்டினால் கூட சிரித்துக்கொண்டே
பயந்துகொண்டே முதல்நாள் ஷூட்டிங்குக்கு சென்றேன். அவர் திட்டினால்கூட சிரித்துக்கொண்டே திட்டினார். ஒரு குழந்தையிடம் வேலைவாங்குவது போன்று இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். அதோடு சினிமாத்தனம் இல்லாத ஒரு சினிமாவை எடுத்துள்ளார். அந்த அளவுக்கு யதார்த்தமான படம் இந்த 'நிமிர்'.
ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருந்தாலும்
அவருடன் வேலை செய்தது ரொம்ப நல்ல அனுபவமாக அமைந்தது. தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அடுத்தபடியாக அவர் இயக்கும் படத்தில் என்னை ஹீரோவுக்கு ஃப்ரெண்டாக நடிக்க அழைத்தாலும் நடிப்பேன்.
அப்பாவாக இயக்குநர் மகேந்திரன்
இயக்குநர் மகேந்திரன் எனது அப்பாவாக நடித்துள்ளார். அவர்தான் இந்தப் படத்திற்கு நிமிர் என்று தலைப்பு வைத்தார். தெறி படத்திற்கு பிறகு நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், இந்தப் படத்தின் கதை பிடித்ததால் நடித்தார்.
சமுத்திரக்கனியுடன் சண்டை
இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள சமுத்திரக்கனிக்கும், எனக்கும் இடையே ஒரு சண்டைக்காட்சி உள்ளது. ஒருநாளில் படமாக்கி விடுவதாக சொன்ன அந்தக் காட்சியை மூன்று நாட்களாக படமாக்கினார்கள். இரண்டு பேருமே உடம்பில் நிஜமாக அடி விழாமல் நடித்தோம்." எனக் கூறினார் உதயநிதி.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!