Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மேரேஜுக்கு முன்னாடி உதய் பண்ணிய சத்தியத்த இப்ப மீறிட்டாரு... கிருத்திகா கலகல பேச்சு
சென்னை: உதயநிதி ஸ்டாலின் தற்சமயம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக நடிகர் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதே போல கிருத்திகா உதயநிதி அவர்கள் 'பேப்பர் ராக்கெட்' என்கிற வெப் சீரீஸை இயக்கியுள்ளார். இது நேற்று இணையத்தில் வெளியானது.
சிம்புவை அடுத்து இயக்க போவது இவர் தானா?...செம காம்போ தான்...அப்போ அந்த படம் என்னாச்சு?
கல்லூரியில் அறிமுகம்
உதயநிதி அவர்களும் கிருத்திகா உதயநிதி அவர்களும் லயோலா கல்லூரியில் தான் ஒன்றாக படித்தார்கள். நடிகர் விஷாலும் இவர்களுடைய கிளாஸ்மேட். கல்லூரியில் படிக்கும்போதே கிருத்திகாவை காதலிக்க தொடங்கி விட்டாராம் உதயநிதி. அவரை அடிக்கடி பின் தொடரவும் செய்துள்ளாராம். ஒரு முறை கிருத்திகா பரத நாட்டியம் அரங்கேற்றிய போது அங்கு உதயநிதி சென்றுள்ளார். அவரை பார்த்ததும் தடுமாறி விட்டாராம் கிருத்திகா. பின்னர் உதயநிதி புரபோஸ் செய்த போது கிருத்திகா மறுத்துவிட்டாராம்.
காரணம்
உதயநிதியின் காதலை ஏற்க மறுத்ததற்கு காரணமாய் அரசியல் பின்னணியைத்தான் கூறியுள்ளார். அரசியலுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதால், அப்படிப்பட்ட சூழ்நிலை உள்ள குடும்பத்தில் தன்னால் வந்து வாழ முடியுமா முடியாதா என்கிற சந்தேகத்தில் கிருத்திகா முதலில் உதயநிதி புரபோசலை மறுத்துள்ளார். ஆனால் எப்போதும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும் உதயநிதியை பார்த்து நீண்ட நாள் தன்னால் அவரை நிராகரிக்க முடியவில்லை எனவும், அரசியலுக்குள் போக மாட்டேன் என்ற சத்தியம் செய்தால்தான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்ற வாக்குறுதியுடன் உதயநிதியின் காதலை ஏற்றுள்ளார் கிருத்திகா.
நடிகர் அவதாரம்
உதயநிதி அவர்கள் முதன்முறையாக சினிமா துறையில் நுழைந்தபோது ஒரு தயாரிப்பாளராகத்தான் வந்தார். விஜய்யின் தீவிர விசிறியானவர் அவரை வைத்தே தன்னுடைய முதல் படத்தை தயாரித்திருந்தார். அதன் பின்னர் திரைப்பட விநியோகத்திலும் இறங்கிய உதயநிதி ஒரு கட்டத்தில் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தாராம். கிருத்திகாவிடம் அதனை கூறிய போது ஏன் திடீரென்று நடிக்கச் செல்கிறாய் என்று கிருத்திகா கேட்க, அரசியல்வாதியாக மாட்டேன் என்றுதான் சத்தியம் செய்துள்ளேன். நடிகராக மாட்டேன் என்று சத்தியம் செய்யவில்லை என்று கூறி நடிப்பதற்கு சம்மதம் வாங்கினாராம்.
உடைந்த சத்தியம்
தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த உதயநிதி தன்னை மெல்ல மெல்ல அரசியலிலும் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ள நிலையில் தன்னிடம் செய்த சத்தியத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து இப்போது முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்று கிருத்திகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!