Don't Miss!
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- News முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் திடீர் விசிட்.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.. பக்கத்தில் அது யாரு?
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கொடிய வைரஸில் இருந்து தப்பிக்க… தடுப்பூசி போட்டுக்கொள்வதே ஒரே வழி… உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை : உதயநிதி ஸ்டாலின் முதல் டோஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்டார்.
கொரோனா எனும் கொடிய வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே என்றார்.
சூப்பரா ஆரம்பித்து வைத்த சூர்யா குடும்பம்.. மற்ற சூப்பர்ஸ்டார்கள் எல்லாம் எப்போ கொடுக்கப் போறாங்க?
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதிக உயிரிழப்பு
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயருகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றன. கடந்த வருடம் இல்லாத அளவுக்கு தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதற்கு உருமாறிய கொரோனா வைரஸும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
படிப்படியாக குறையும்
இரண்டாம் அலையில் ஒரு நாளைக்கு 4 இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா இரண்டாம் அலை குறைய ஜூலை மாதம் ஆகும் எனவும் படிப்படியாகத்தான் குறைய தொடங்கும் என கூறப்படுகிறது. கொடிய கொரோனா வைரஸிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை இளம் நடிகர் வலியுறுத்தி வருகின்றனர். பல நடிகர், நடிகைகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
உதயநிதி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். "தடுப்பூசி எடுப்பதே கொடிய வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி என்றார். கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் நான் இன்று எடுத்துள்ளேன். அனைவரும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சண்டையில் நாங்கள் வெற்றி பெறுவோம். முகமூடி அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்கள் என்று கூறியுள்ளார்.
Recommended Video
வெகுவாக பாராட்டு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்.ஏவாகி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். பதவியேற்ற அன்றே தொகுதிக்கு நேரடியாக சென்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவரின் இந்த செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.