Don't Miss!
- News EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கொடிய வைரஸில் இருந்து தப்பிக்க… தடுப்பூசி போட்டுக்கொள்வதே ஒரே வழி… உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை : உதயநிதி ஸ்டாலின் முதல் டோஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்டார்.
கொரோனா எனும் கொடிய வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே என்றார்.
சூப்பரா ஆரம்பித்து வைத்த சூர்யா குடும்பம்.. மற்ற சூப்பர்ஸ்டார்கள் எல்லாம் எப்போ கொடுக்கப் போறாங்க?
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதிக உயிரிழப்பு
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயருகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றன. கடந்த வருடம் இல்லாத அளவுக்கு தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதற்கு உருமாறிய கொரோனா வைரஸும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
படிப்படியாக குறையும்
இரண்டாம் அலையில் ஒரு நாளைக்கு 4 இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா இரண்டாம் அலை குறைய ஜூலை மாதம் ஆகும் எனவும் படிப்படியாகத்தான் குறைய தொடங்கும் என கூறப்படுகிறது. கொடிய கொரோனா வைரஸிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை இளம் நடிகர் வலியுறுத்தி வருகின்றனர். பல நடிகர், நடிகைகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
உதயநிதி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். "தடுப்பூசி எடுப்பதே கொடிய வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி என்றார். கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் நான் இன்று எடுத்துள்ளேன். அனைவரும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சண்டையில் நாங்கள் வெற்றி பெறுவோம். முகமூடி அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்கள் என்று கூறியுள்ளார்.
Recommended Video
வெகுவாக பாராட்டு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்.ஏவாகி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். பதவியேற்ற அன்றே தொகுதிக்கு நேரடியாக சென்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவரின் இந்த செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.