Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அப்பா- மகனுக்கு இடையேயான உறவே கெத்து... இயக்குநர் திருக்குமரன்
சென்னை: ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவைத் தான் கெத்து படத்தில் காட்டியிருக்கிறேன் என்று படத்தின் இயக்குநர் திருக்குமரன் தெரிவித்து இருக்கிறார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா போன்ற படங்களில் காமெடி நாயகனாக நடித்திருந்தார்.
ஆனால் காமெடி அவருக்குக் கைகொடுக்கவில்லை இதனால் கெத்து படத்தின் மூலம் தற்போது ஆக்ஷன் பாதைக்கு திரும்பியிருக்கிறார்.
இந்தப் படத்தில் இவருடன் இணைந்து எமி ஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாகும் கெத்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், விஷாலின் கதகளி மற்றும் பாலாவின் தாரை தப்பட்டை ஆகிய படங்களுடன் மோதுகிறது.
பொங்கல் ரேஸில் இருந்து அரண்மனை 2 பின்வாங்கியதால் தனது படத்தை பொங்கலுக்கு துணிந்து களமிறக்குகிறார் உதயநிதி.இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் திருக்குமரன் படத்தின் கதை பற்றி தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறும்போது "அப்பா - மகனுக்கு இடையேயான பாசம், நேசம் ஆகியவற்றைப் பற்றிய கதையே கெத்து. இந்தப் படத்தில் உதயநிதி அப்பாவிடம் மிகுந்த அன்பு கொண்டவராக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அப்பா - மகன் இருவரும் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கின்றனர். அந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா?இல்லையா? என்பதை ஆக்ஷன் கலந்து கொடுத்திருக்கிறேன்" என்று திருக்குமரன் கூறுகிறார்.
சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் திருக்குமரன்.