'காதலி'க்காக மாதக்கணக்கில் காத்திருந்த 'கதிர்வேலன்'!

உதயநிதியை வைத்து எந்த காட்சியும் எடுக்க முடியவில்லை. காரணம் அவர் வரும் காட்சிகளில் ஒன்று நயன்தாரா இருப்பார்... அல்லது சந்தானம் இருப்பார். சந்தானமும் செம பிஸி.
ஆகவே வேறு வழியின்றி இந்த இருவருக்காகவும் காத்திருந்தார் கதிர்வேலனான உதயநிதி.
அஜீத் பட கமிட்மென்டுகளை முடித்துவிட்டு நேற்றுதான் கதிர்வேலன் காதலி படத்தின் ஷூட்டிங்குக்கு கோவை வந்தார் நயன்தாரா. அவர் தொடர்புடைய காட்சிகளை மளமளவென்று ஷூட் செய்ய ஆரம்பித்துள்ளார் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். நாளையிலிருந்து உதயநிதியுடன் டூயட் பாடவிருக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் பின்னர் சந்தானம் சேர்ந்து கொள்வாராம்.
ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications