Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் வாங்கி வெளியிட்ட படங்கள் அத்தனையும் ஓடியிருக்கின்றன- உதயநிதி
நான் தயாரித்த சில படங்கள் சரியாகப் போகாவிட்டாலும், வாங்கி வெளியிட்ட படங்கள் நன்றாகவே ஓடியிருக்கின்றன என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.
‘அட்டகத்தி' தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ள படம் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்'. ராம் பிரகாஷ் ராயப்பா கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார். வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தை ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படக்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
உதயநிதி ஸ்டாலின்
அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நிறைய படங்களைத் தயாரித்துள்ளேன். மைனா போன்ற சில படங்களை வாங்கி வெளியிட்டுள்ளேன். தயாரித்த படங்களில் சில நன்றாக போகாமல் இருந்தாலும் வாங்கி வெளியிட்ட அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன.
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்
‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்' படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. பிறகு டிரெய்லரை பார்த்தேன் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் வி.சந்திரனை தொடர்பு கொண்டு படத்தை பார்க்க விரும்புவதாக கூறினேன்.
வித்தியாசமான படம்
அவரும் படத்தை எனக்கு காட்டினார். சாதாரண படமாக இல்லை. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான விஷயம் இருந்தது. கமர்சியல் படத்துக்கான விஷயங்கள், காதல் காட்சிகள் எல்லாமே சிறப்பாக இருந்தன. எனவே உடனடியாக இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன் வந்தேன். வருகிற 20-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது," என்றார்.
மொபைல் போன்
இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறுகையில், "மொபைல் போனை பலரும் உபயோகிக்கின்றனர். அந்த போன் பயன்பாட்டை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்," என்றார்.
நடிகை பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, நடிகர் நகுல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.