Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் வாங்கி வெளியிட்ட படங்கள் அத்தனையும் ஓடியிருக்கின்றன- உதயநிதி
நான் தயாரித்த சில படங்கள் சரியாகப் போகாவிட்டாலும், வாங்கி வெளியிட்ட படங்கள் நன்றாகவே ஓடியிருக்கின்றன என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.
‘அட்டகத்தி' தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ள படம் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்'. ராம் பிரகாஷ் ராயப்பா கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார். வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தை ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படக்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
உதயநிதி ஸ்டாலின்
அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நிறைய படங்களைத் தயாரித்துள்ளேன். மைனா போன்ற சில படங்களை வாங்கி வெளியிட்டுள்ளேன். தயாரித்த படங்களில் சில நன்றாக போகாமல் இருந்தாலும் வாங்கி வெளியிட்ட அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன.
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்
‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்' படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. பிறகு டிரெய்லரை பார்த்தேன் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் வி.சந்திரனை தொடர்பு கொண்டு படத்தை பார்க்க விரும்புவதாக கூறினேன்.
வித்தியாசமான படம்
அவரும் படத்தை எனக்கு காட்டினார். சாதாரண படமாக இல்லை. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான விஷயம் இருந்தது. கமர்சியல் படத்துக்கான விஷயங்கள், காதல் காட்சிகள் எல்லாமே சிறப்பாக இருந்தன. எனவே உடனடியாக இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன் வந்தேன். வருகிற 20-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது," என்றார்.
மொபைல் போன்
இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறுகையில், "மொபைல் போனை பலரும் உபயோகிக்கின்றனர். அந்த போன் பயன்பாட்டை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்," என்றார்.
நடிகை பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, நடிகர் நகுல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.