Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'உளியின் ஓசை' பட இயக்குனர் இளவேனில் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!
சென்னை: எழுத்தாளரும் இயக்குனருமான இளவேனில் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73.
கருணாநிதியின் சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதையை அடிப்படையாக வைத்து 'உளியின் ஓசை' என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டது.
இதில் வினீத், கீர்த்தி சாவ்யா, சரத்பாபு, மனோரமா, கோவை சரளா, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர்.
இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தை இயக்கியவர், இளவேனில். எழுத்தாளரான இவர், ஆத்மா என்றொரு தெருப்பாடகன், புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணம் அடைந்தார்.
அவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை வடபழநியில் உள்ள ஏ.வி.எம் சுடுகாட்டில் நடக்கிறது. மறைந்த இளவேனிலுக்கு மனைவி பாக்கியலட்சுமி, மகன் சிந்து கார்க்கி, மகள் சுபா உள்ளனர். இளவேனில் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.