Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா மிக மோசமா இருக்கு… தயவு செய்து பாதுகாப்பா இருங்க.. உமா ரியாஷ்கான் அறிவுரை !
சென்னை : உமா ரியாஷ்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மருத்துவமனையில் இருந்தபடி பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார்.
பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை.. சோகத்தில் ரசிகர்கள்!
மாஸ்க்அணிந்து வெளியில் செல்லுங்க என்றும் அவர் கூறியுள்ளார்.
தினசரி பாதிப்பு 4 லட்சம்
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால்,
நேற்று ஒரே நாளில் 19,588
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,86,344 பேராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5829 கொரோனா தொற்று உறுதி
சென்னையில் 5829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 147பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 14,193 பேராக உயர்ந்துள்ளது.
அறிவுரை
இந்நிலையில் நடிகை உமா ரியாஷ்கான் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இப்போ நெகட்டிவ்னு வந்திருக்கு என்ன கவனிச்சிக்கிட்ட மருத்துவர்களுக்கும் , செவிலியர்களுக்கு ரொம்ப நன்றி, அனைவரும் பாதுகாப்பா இருக்கு மாஸ்க் போட்டுக்கிட்டு வெளியில போங்கா பாதுகாப்பாக இருங்க என்று கூறினார்.