Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று தெலுங்கானா மாநிலம் பாப்பிரெட்டிகுடா கிராமத்தில் உள்ளது. அந்த பண்ணை வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் கேசம்பட்டு அருகே உள்ள பாப்பிரெட்டிகுடா எனும் கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்றை நாகார்ஜுனா சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியிருந்தார். அந்த பண்ணை வீடு மற்றம் நிலம் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது.
எங்க தல ஸ்ட்ரெய்ட்டா ராமனாத்தான் நடிப்பார்... பிரபாஸ் ரசிகர்கள் மல்லுக்கட்டு
பார்வையிட்ட அமலா
இம்மாத ஆரம்பித்தில் தான் நாகார்ஜுனாவின் மனைவி நடிகை அமலா அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பிறகு அங்கிருக்கும் சிலரை வைத்து, அந்த நிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்கினார்.
ஆண் பிணம்
பண்ணையாட்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஷெட் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவர்கள் சேகம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்த போது, அந்த ஷெட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.
பிரேதப்பரிசோதனை
அந்த பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த ஆண் பிணம் பிரேதப் பரிசோதனைக்காக, சைபராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அந்த நபர் இறந்து ஆறு மாதத்துக்கு மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சேகம்பட்டு போலீசார் பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரிக்கப்படுமா என்பது குறித்து இனி தான் தெரியவரும்.
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!