Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று தெலுங்கானா மாநிலம் பாப்பிரெட்டிகுடா கிராமத்தில் உள்ளது. அந்த பண்ணை வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் கேசம்பட்டு அருகே உள்ள பாப்பிரெட்டிகுடா எனும் கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்றை நாகார்ஜுனா சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியிருந்தார். அந்த பண்ணை வீடு மற்றம் நிலம் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது.
எங்க தல ஸ்ட்ரெய்ட்டா ராமனாத்தான் நடிப்பார்... பிரபாஸ் ரசிகர்கள் மல்லுக்கட்டு
பார்வையிட்ட அமலா
இம்மாத ஆரம்பித்தில் தான் நாகார்ஜுனாவின் மனைவி நடிகை அமலா அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பிறகு அங்கிருக்கும் சிலரை வைத்து, அந்த நிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்கினார்.
ஆண் பிணம்
பண்ணையாட்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஷெட் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவர்கள் சேகம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்த போது, அந்த ஷெட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.
பிரேதப்பரிசோதனை
அந்த பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த ஆண் பிணம் பிரேதப் பரிசோதனைக்காக, சைபராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அந்த நபர் இறந்து ஆறு மாதத்துக்கு மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சேகம்பட்டு போலீசார் பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரிக்கப்படுமா என்பது குறித்து இனி தான் தெரியவரும்.