Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐஸ்வர்யா பெயரில் கல்லூரி-ஏமாற்றியதாக அமிதாப் மீது புகார்
உத்தரபிரதேசம் மாநிலம் பாராபஸ்கி மாவட்டத்தில் உள்ள தவுலாத்பூர் கிராமத்தில் நடிகர் அமிதாப்பச்சன் ஏராளமான விவசாய நிலங்களை வாங்கினார்.
இதில் அந்த பகுதி மக்களின் நலனுக்காக ஐஸ்வர்யா ராய் பெயரில் கல்லூரி கட்டுவதாகவும் அறிவித்தார்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2008ம் ஆண்டு பிரமாண்டமாய் நடந்தது. இதில் அமிதாப் பச்சன், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர் சிங், ஜெயாபச்சன், அபி ஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் கல்லூரி கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமாரி என்பவர் பாராவஸ்கி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 6 பேரும் கல்லூரி கட்டி தருவாக கூறி கிராம மக்களை ஏமாற்றி நிலம் வாங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மொகமாத்பூர் காலா, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட 6 பேரிடமும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஜூன் 10ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.