Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அஜீத் ஹீரோயினுக்கு 'அரிய' பிறந்தநாள் பரிசு கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார்
பெங்களூர்: நடிகை பிரியங்காவுக்கு அவரது கணவரான கன்னட நடிகர் உபேந்திரா புதிய 2000 ரூபாய் நோட்டை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் நடிகை பிரியங்கா த்ரிவேதி. தமிழில் ராஜ்ஜியம், அஜீத்தின் ராஜா, விக்ரமின் காதல் சடுகுடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து மணந்து பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.
உபேந்திரா, பிரியங்கா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பிறந்தநாள்
பிரியங்கா கடந்த 9ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி உபேந்திரா பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டியில் கன்னட திரையுலகினர் கலந்து கொண்டனர்.
பரிசு
பார்ட்டிக்கு வந்திருந்த அனைவரையும் தன்னை பார்க்குமாறு கூறி தனது மனைவிக்கு பரிசு கொடுத்தார் உபேந்திரா. பிரியங்கா உபேந்திரா அளித்த கவரை பிரித்து பார்த்தபோது அதில் புதிய 2000 ரூபாய் நோட்டு இருந்தது.
உபேந்திரா
வரிசையில் நிற்காமல் உனக்கு புதிய 2000 ரூபாய் நோட்டு கிடைத்துள்ளது. நீ கொடுத்து வைத்தவள் இல்லையா என உபேந்திரா தனது மனைவியை பார்த்து கேட்டார்.
மோடி
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு தினமும் வரிசையில் கால் வலிக்க காத்துக் கிடக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.