Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அரசியலுக்கு வரவே நடிக்க வந்தேன்: சீனியர் ஹீரோ பரபர பேட்டி
பெங்களூர்: அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் தான் நடிக்க வந்தேன் என்று உபேந்திரா தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி துவங்குவதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் பிரபலமான அவர் தனது ரசிகர்கள், குடும்பத்தாருடன் கலந்து பேசி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நடிப்பு
அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் தான் நடிக்க வந்தேன். சிறுவயதில் இருந்தே அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சிறு வயதில் நான் சொன்ன ஐடியாக்களை யாரும் ஏற்கவில்லை.
பெரிய ஆள்
சமூகத்தில் பெரிய ஆளாக ஆனால் தான் நாம் சொல்வது எடுபடும் என்று புரிந்தது. அதன் பிறகே சினிமா துறையில் நுழைந்தேன். அரசியல் குறித்து என் நண்பர்கள், குடும்பத்தாரின் கருத்துகளை கேட்டு வந்தேன். அதன் பிறகே கட்சி துவங்கும் முடிவை எடுத்தேன்.
கட்சி
தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் பலரை எனக்கு பிடிக்கும். ஆனால் அவர்களின் கொள்கைகள் எனக்கு ஒத்து வராது. அதனாலேயே தனிக்கட்சி துவங்குகிறேன்.
பணம்
தற்போதைய அரசியல் பணத்தை வைத்து நடத்தப்படுகிறது. அதனால் தான் நான் எந்த கட்சியிலும் சேராமல் தனிக்கட்சி துவங்க முடிவு செய்தேன் என்றார் உபேந்திரா.