Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முடிந்தது உப்பு கருவாடு... டேஸ்ட் பார்க்க தயாராகுங்க!
மொழி, அபியும் நானும், பயணம், கவுரவம் போன்ற கவனிக்கத்தக்க படங்கள் தந்த ராதாமோகன் அடுத்து இயக்கும் படம் உப்பு கருவாடு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ், நைட் ஷோ சினிமா நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தில், கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். முழுமையான பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள இப்படம் சினிமா வட்டாரத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் கூறுகையில், "தேர்ந்த பல படங்களை தந்து வரும் இயக்குனர் ராதா மோகன், மீண்டும் ஒரு அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பு படத்தை குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளனர்.
‘உப்பு கருவாடு' குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகின்றன. விரைவில் ரசிகர்கள் சுவைக்க தயாரிகிறது ‘உப்பு கருவாடு', என்றார்.