Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிவ சேனாவில் இணைகிறார் பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர்.. கட்சியின் சேரும் முன்பே தேடி வந்த பதவி!
மும்பை: இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், சிவசேனா கட்சியில் இணைகிறார்.
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களிலும் நடித்துள்ளார்.
ரங்கீலா நாயகி
இந்தியில் ரங்கீலா, சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் திடீரென இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
தோல்வி அடைந்தார்
இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளரிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தான் தோற்றதாகவும் அப்போது அவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
சிவ சேனா கட்சி
பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சிவசேனா கட்சியில் சேர இருக்கிறார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவர் மகனும்
அமைச்சருமான ஆதித்யா ஆகியோர் முன்பு, அவர் அந்தக் கட்சியில் இணைய இருக்கிறார்.
சட்ட மேலவை
அவருக்கு அந்தக் கட்சி, அதற்குள் சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனா கட்சி பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஆளுநர் கோஷியாரி ஓப்புதல் வழங்கியுள்ளார்.