Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிவ சேனாவில் இணைகிறார் பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர்.. கட்சியின் சேரும் முன்பே தேடி வந்த பதவி!
மும்பை: இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், சிவசேனா கட்சியில் இணைகிறார்.
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களிலும் நடித்துள்ளார்.
ரங்கீலா நாயகி
இந்தியில் ரங்கீலா, சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் திடீரென இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
தோல்வி அடைந்தார்
இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளரிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தான் தோற்றதாகவும் அப்போது அவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
சிவ சேனா கட்சி
பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சிவசேனா கட்சியில் சேர இருக்கிறார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவர் மகனும்
அமைச்சருமான ஆதித்யா ஆகியோர் முன்பு, அவர் அந்தக் கட்சியில் இணைய இருக்கிறார்.
சட்ட மேலவை
அவருக்கு அந்தக் கட்சி, அதற்குள் சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனா கட்சி பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஆளுநர் கோஷியாரி ஓப்புதல் வழங்கியுள்ளார்.