Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக அமிதாப் பச்சனுக்கு யு.எஸ். கோர்ட் சம்மன்
லாஸ் ஏஞ்சல்ஸ்: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டது பற்றி பதில் அளிக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் நடிகர் அமிதாப் பச்சனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த கலவரத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் தூண்டிவிட்டார் என்று கூறி அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பான சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் சார்பில் அதன் சட்ட ஆலோசகர் குருபத்வந்த் பன்னூன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கால் அமிதாப் பச்சனுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அமிதாப்
பன்னூன் தனது மனுவில் கூறியிருப்பதாவது, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு ரத்தத்திற்கு ரத்தம் என்று கோஷமிட்டு கலவரத்தை தூண்டியதே அமிதாப் பச்சன் தான் என்று தெரிவித்துள்ளார்.
காந்தி குடும்பம்
காந்தி குடும்பத்திற்ரு நெருக்கமாக இருந்த அமிதாப் பச்சன், 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விட்டார் என்று பன்னூன் தெரிவித்துள்ளார்.
சம்மன்
பன்னூனின் மனுவை ஏற்றுக் கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்குமாறு அமிதாப் பச்சனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் 21 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
சாட்சியம்
சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியமான ஜக்தீஷ் கௌர் கூறுகையில், ரத்தத்திற்கு ரத்தம் என்று அமிதாப் பச்சன் இரண்டு முறை கோஷமிட்டதை தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்ததை நான் பார்த்துள்ளேன். அவர் மீது ஏன் இந்தியாவில் வழக்கு தொடரப்படவில்லை என்று கேட்டுள்ளார்.