Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அமிதாபுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை, ஆனால் படம்..: எஸ்.ஜே. சூர்யா
Recommended Video
சென்னை: உயர்ந்த மனிதன் படத்தின் தயாரிப்பாளருக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வந்த படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் அமிதாப் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.
அமிதாபுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தார் சூர்யா. செட்டில் அமிதாபும், சூர்யாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
உயர்ந்த மனிதன்
படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் அமிதாபுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. உயர்ந்த மனிதன் படத்திற்கு அளித்த டேட்ஸில் அவர் வேறு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது.
அமிதாப் பச்சன்
அமிதாப் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த பிரச்சனையால் உயர்ந்த மனிதன் படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து எஸ்.ஜே. சூர்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா
தயாரிப்பு தரப்புக்கும், அமிதாப் சாருக்கும் இடையே சிறு பிரச்சனை உள்ளது. அதை தீர்த்து வைத்து படப்பிடிப்பை நடத்துவோம். மான்ஸ்டர் படம் ரிலீஸான பிறகு மும்பை சென்று இந்த பிரச்சனை குறித்து பேசி தீர்வு காணப்படும். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் ஏற்கனவே பல பிரச்சனைகளை தீர்த்து தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
மான்ஸ்டர்
எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் நாளை ரிலீஸாகிறது. தன் படத்திற்கு யு சான்று கிடைத்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இது குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று தெரிவித்துள்ளார் அவர்.