Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அமிதாபுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை, ஆனால் படம்..: எஸ்.ஜே. சூர்யா
Recommended Video
சென்னை: உயர்ந்த மனிதன் படத்தின் தயாரிப்பாளருக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வந்த படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் அமிதாப் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.
அமிதாபுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தார் சூர்யா. செட்டில் அமிதாபும், சூர்யாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
உயர்ந்த மனிதன்
படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் அமிதாபுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. உயர்ந்த மனிதன் படத்திற்கு அளித்த டேட்ஸில் அவர் வேறு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது.
அமிதாப் பச்சன்
அமிதாப் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த பிரச்சனையால் உயர்ந்த மனிதன் படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து எஸ்.ஜே. சூர்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா
தயாரிப்பு தரப்புக்கும், அமிதாப் சாருக்கும் இடையே சிறு பிரச்சனை உள்ளது. அதை தீர்த்து வைத்து படப்பிடிப்பை நடத்துவோம். மான்ஸ்டர் படம் ரிலீஸான பிறகு மும்பை சென்று இந்த பிரச்சனை குறித்து பேசி தீர்வு காணப்படும். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் ஏற்கனவே பல பிரச்சனைகளை தீர்த்து தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
மான்ஸ்டர்
எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் நாளை ரிலீஸாகிறது. தன் படத்திற்கு யு சான்று கிடைத்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இது குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று தெரிவித்துள்ளார் அவர்.