Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வில்லங்கமாகும் பஞ்சாயத்து..நான் குடிகாரனா? கே.ராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும்..தயாரிப்பாளர் ஆவேசம்!
சென்னை: தன்னைக் குடிகாரன் என்று சொன்ன கே.ராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் ஆவேசமடைந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சில திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நடக்கும் பஞ்சாயத்துக்கள் காரசாரமாகி வருகின்றன.
லாக்டவுன் காரணமாக மற்றத் துறைகளை போல சினிமா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு பலர் உதவினர்.
ஒரே
ஒரு
போட்டோவ
ஷேர்
பண்ணி
மொழி
பிரச்சனையை
உண்டாக்கிய
நடிகை..
ரணகளமாகும்
டிவிட்டர்!

ரஜினிகாந்த்
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் பணம் மற்றும் பொருளுதவி செய்தனர். இந்நிலையில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ரஜினிகாந்த் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் மற்ற அமைப்புகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொடுத்ததை போல, தயாரிப்பாளர்களுக்கும் கொடுத்தார்.

குறிப்பிட்ட தொகை
இதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் முதலாளிகளாக இருப்பவர்கள். வெறும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை எப்படி வரிசையில் நின்று வாங்க முடியும்? ரஜினி, தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்க வேண்டும் என்றனர்.

தயாரிப்பாளர் பழனிவேல்
இந்நிலையில், அந்த நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் பழனிவேல் உட்பட சிலர் அங்கு வந்தனர். பழனிவேல், ஓரம்போ, நீ வேணுன்டா செல்லம் உட்பட சில படங்களை தயாரித்தவர். அவர், நிவாரணப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்த தயாரிப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி உட்பட சிலர் அவரை சமாதானப்படுத்தினர்.

தட்டிக்கேட்டேன்
சிறிது நேரத்தில் அவர் சென்றுவிட்டார். பின்னர், அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், 'நாம் முதலாளிகள். நாம் அரிசி வாங்கலாமா? என்று கேட்டிருந்தார். இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில், தயாரிப்பாளர் பழனிவேல் இப்போது புதிய ஆடியோ பதிவு ஒன்றை தயாரிப்பாளர்களின் வாட்ஸப் குரூப்பில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘ரஜினிகாந்த் நிவாரணப் பொருட்கள் கொடுத்ததை அன்று தட்டிக் கேட்டதற்கு என்னை குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார், கே.ராஜன்.

மன்னிப்பு கேட்கணும்
தட்டிக்கேட்டதுக்கு, இந்த பட்டம் கொடுத்த அவருக்கு நன்றி. யாரை பார்த்து குடிகாரன்னு சொல்றீங்க? நான் குடிகாரனா? இதுக்கு, உடனே மன்னிப்புக் கேட்கலைன்னா, நீங்க எங்கெங்க குடிச்சு விழுந்து எழுந்தீங்கன்னு தெரியும். அதை எல்லாம் வீடியோவாவே வெளியிடுவேன். என்னை ஒருமையில வேற பேசியிருக்கீங்க.

வயசுக்கு மரியாதை
நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா? அன்னைக்கு வந்து நான் தட்டிக் கேட்டதுக்கு அவ்வளவு தயாரிப்பாளர்கள் என்னை பாரட்டினாங்க, தெரியுமா? உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்தா இப்படியா சொல்வீங்க?' என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர்கள் பஞ்சாயத்து பரபரப்பாகி இருக்கிறது.