VaadiVaasal: சூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபலம்... வெற்றிமாறன் கொடுத்த வாடிவாசல் அப்டேட்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கமிட்டான திரைப்படம் வாடிவாசல்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க சில மாதங்கள் தாமதமாகும் என சொல்லப்படுகிறது.

விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்குப் பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளாராம் வெற்றிமாறன்.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளதாக தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

 VaadiVaasal: Vetrimaaran Confirms that Ameer is Playing an Important role in VaadiVaasal

சூர்யாவுடன் மீண்டும் இணையும் அமீர்: சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா, பான் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. வழக்கமாக தனுஷுடன் இணையும் வெற்றிமாறன், முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி வைத்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக வைத்து செம்ம மிரட்டலாக உருவாகவிருந்தது வாடிவாசல். இதற்காக சூர்யா தான் வளர்க்கும் காளையுடன் ஜல்லிக்கட்டு பயிற்சி எடுத்து வந்தார். இன்னொரு பக்கம் கங்குவா படத்திலும் கவனம் செலுத்தினார். இதனால் கங்குவா ஷூட்டிங் முடிந்ததும் வாடிவாசல் தொடங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் சூர்யாவால் இன்னும் கங்குவா படப்பிடிப்பில் இருந்து வெளிவர முடியவில்லை.

 VaadiVaasal: Vetrimaaran Confirms that Ameer is Playing an Important role in VaadiVaasal

அதேபோல் வெற்றிமாறனும் விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஒருகட்டத்தில் வாடிவாசல் ட்ராப் ஆகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தாணு மூவருமே வாடிவாசல் கண்டிப்பாக உருவாகும் என தெரிவித்தனர். இதனிடையே கங்குவாவை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா.

இதனால் மீண்டும் வாடிவாசல் திரைப்படம் ட்ராப் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது உண்மையில்லை என சொல்லும் விதமாக தற்போது தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். அதாவது வாடிவாசல் படத்தில் இயக்குநர் அமீர் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். வடசென்னை படப்பிடிப்பின் போதே அமீரை வாடிவாசலில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பல வருடங்களுக்குப் பின்னர் சூர்யா - அமீர் இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். அமீர் முதலில் இயக்கிய மெளனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக அறிமுகமானதும் குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற மெளனம் பேசியதே, இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் மீண்டும் இணையாத சூர்யா - அமீர் கூட்டணி, விரைவில் வாடிவாசல் படத்தில் இணைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X