Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இரண்டெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. வாலி மறைந்து 1 வருடம் ஓடி விட்டதே!
சென்னை: வாலிபக் கவி வாலி... மறைந்து ஒரு வருடமாகி விட்டது. இதையொட்டி இன்று சென்னையில் ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாகாவரம் படைத்த அழகான காதல் பாடல்கள் பலவற்றைக் கொடுத்தவர் வாலி. எம்.ஜி.ஆர். முதல் சிம்பு, தனுஷ் வரைக்கும் இவர் பாடல் எழுதாத நடிகர்களே கிடையாது.
யார் யாருக்கு என்ன மாதிரியான பாடல்கள் வேண்டுமோ, பொருந்துமோ, அதை அப்படி அப்படியேக் கொடுத்து அசத்தியவர் வாலி.
ஐந்து தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். 15,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்தவர், பல அருமையான நூல்களை எழுதியவர்.
எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பல இன்றளவும் அவர் பெயரைச் சொல்லியபடி காற்றில் உலவிக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி மரணமடைந்தார் வாலி.
வாலியின் முதலாமாண்டு நினைவையொட்டி தமிழ் சிமிழ் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார், பா.விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.