காவியக் கவிஞர் வாலிக்கு இன்று 82வது பிறந்தநாள்: உன்ன நெனச்சேன்.. பாட்டுப் படிச்சேன்
சென்னை: 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் வாலியின் 82வது பிறந்தநாள் இன்று.
5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் காவியக் கவிஞர் வாலி. அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் அவரின் 82வது பிறந்தநாளான இன்று அவரை நாம் நினைவு கூர்வோம். வாலியின் மறைவு திரை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி கடைசியாக பாடல் எழுதியது சித்தார்த் நடிக்கும் காவியத் தலைவன் படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கராஜனாக பிறந்த வாலி வயதானாலும் மனதளவில் வாலிபராகவே இருந்து மறைந்தார்.


Click it and Unblock the Notifications











