Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் 'வாலு' தள்ளிப் போனது: ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றாததை நினைத்து சிம்பு வருத்தம்
சென்னை: என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க தவறியதில் வருத்தமாக உள்ளது என்று வாலு பட ரிலீஸ் தள்ளிப்போனது பற்றி சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள வாலு படம் ரிலீஸாகாமல் இழுத்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் தான் படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 24ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
படம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி பிப்ரவரி மாதம் 3ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிம்பு கூறுகையில்,
ஒரு நடிகராக நடிப்பது, ஐடியாக்கள் கொடுப்பது தான் என் பணி. படத்தின் வர்த்தகம் தொடர்பான விஷங்களில் நான் தலையிடுவது இல்லை. என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்காததால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். ஆனால் இது தான் பிசினஸ் சட்டம். அதை நான் மதிக்கிறேன். வருத்தம் இருந்தாலும் 2015ம் ஆண்டை நான் வாலு படத்துடன் வரவேற்கிறேன்.
அந்த படத்தை அடுத்து இது நம்ம ஆளு ரிலீஸ் ஆகும் என்றார்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே 2 சிம்பு படங்கள் ரிலீஸாகும்.