Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மீண்டும் 'வாலு' தள்ளிப் போனது: ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றாததை நினைத்து சிம்பு வருத்தம்
சென்னை: என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க தவறியதில் வருத்தமாக உள்ளது என்று வாலு பட ரிலீஸ் தள்ளிப்போனது பற்றி சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள வாலு படம் ரிலீஸாகாமல் இழுத்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் தான் படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 24ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
படம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி பிப்ரவரி மாதம் 3ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிம்பு கூறுகையில்,
ஒரு நடிகராக நடிப்பது, ஐடியாக்கள் கொடுப்பது தான் என் பணி. படத்தின் வர்த்தகம் தொடர்பான விஷங்களில் நான் தலையிடுவது இல்லை. என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்காததால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். ஆனால் இது தான் பிசினஸ் சட்டம். அதை நான் மதிக்கிறேன். வருத்தம் இருந்தாலும் 2015ம் ஆண்டை நான் வாலு படத்துடன் வரவேற்கிறேன்.
அந்த படத்தை அடுத்து இது நம்ம ஆளு ரிலீஸ் ஆகும் என்றார்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே 2 சிம்பு படங்கள் ரிலீஸாகும்.