twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாலு மீது மேலும் 6 வழக்குகள்... ரம்ஜானுக்கு வெளியாவது சந்தேகமே

    By Manjula
    |

    சென்னை: சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவான வாலு படத்தின் மீதான விசாரணை, சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

    2 வருடங்களுக்கு முன்பு வாலு படத்தின் வெளியீட்டு உரிமையை எங்களுக்கு கொடுத்து விட்டு தற்போது வேறு நிறுவனம் மூலமாக, வாலு படத்தை வெளியிட இருக்கின்றனர். எனவே இதனைத் தடை செய்ய வேண்டும் என்று மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

    Vaalu Movie Issue

    மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று, வாலு படத்தைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சென்னை உயர்நீதிமன்றம் காலஅவகாசம் கொடுத்து வழக்கை இன்று ஒத்தி வைத்தது.

    இந்த நிலையில், இன்னும் 6 வழக்குகள் வாலு படத்தின் மீது போடப்பட்டு இருக்கிறதாம். இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறார்களாம்.

    நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது வாலு இப்போதைக்கு வெளியாவது போலத் தெரியவில்லை, இதனால் தனுஷின் மாரி படம் ரம்ஜான் ரேஸில் தனியாகக் களம் காணுகிறது.

    Vaalu Movie Issue

    சிம்புவின் ரசிகர்கள் சோகமாக இருக்க தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வாலு படம் வழக்கில் உள்ளது எனவே இந்த வெள்ளியன்று தனுஷின் மாரி சோலோவாக ரிலீஸ் ஆகின்றது என்று ட்விட்டரில், தங்கள் வாழ்த்துகளை தொடர்ந்து பதிவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள்.

    English summary
    Vaalu Movie Again postponed , The High Court Stay Order Continues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X