Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் படங்கள்.. ஃபீல் செய்யும் ஃபேன்ஸ்!
சென்னை : சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் அருவி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த வாழ் இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அதிகார பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
சிவகார்த்திகேயனின் டான்...படப்பிடிப்பு எப்போது துவங்குது தெரியுமா ?
திரையுலகையே திருப்பிப் போட்ட
கடந்த 2016ல் வெளியான அருவி ஒட்டுமொத்த திரையுலகையே திருப்பிப் போட்டது. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். ஹெச்ஐவி பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்றளவும் சமூகத்தில் இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறிய இந்த படத்திற்கு சர்வதேச அளவில் பல விருதுகளும் அளிக்கப்பட்டிருந்தது.
அடுத்த படத்தை
அருவி படத்தை தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி இவர்களது கூட்டணியில் வாழ் உருவாகி உள்ளது. இதில் பிரதீப் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
வாழ்
பிரதீப், பானு, திவ்யா, யாத்ரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சென்ற ஆண்டு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது . சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினையை பேசியிருக்கும் வாழ் பிப்ரவரி மாதமே வெளியாக தயாராகி இருந்தது . கொரோனா பரவல் காரணமாக இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது.
ஜூலை 16ஆம் தேதி
இந்த நிலையில் இப்படத்தை பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்க வரும் ஜூலை 16ஆம் தேதி நேரடியாக சோனி லைவ்வில் வெளியிடப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இப்பொழுது வெளியாகியுள்ளது. டாக்டரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் வாழ் படமும் ஓடிடியில் வெளியாவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இப்படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகரை அருண் பிரபு இயக்க உள்ளார்.