Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அருவி இயக்குநரின் வாழ் படம்... 16ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியீடு... சிவகார்த்திகேயன் அறிவிப்பு
சென்னை : அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படைப்பு வாழ்.
இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் வரும் 16ம் தேதி ரிலீசாக உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
அருவி, ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்காது.. அதனால் தான் எதிர்க்கிறோம்.. எஸ்.ஆர். பிரபு ஆவேசம்!
சிறப்பான படம்
கடந்த 2017ல் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அருவி படம் வெளியானது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அதிதி பாலன். மேலும் அஞ்சலி வரதன், கவிதாபாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரிக் குவித்தது.
வாழ் படம்
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தனது அடுத்த படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு வாழ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முற்றிலும் புது முகங்கள் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைப்பில் குட்டி ரேவதி, அருண் பிரபு மற்றும் பிரதீப் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் அறிவிப்பு
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் சோனி லைவ்வில் நேரடியாக வரும் 16ம் தேதி ரிலீசாக உள்ளதாக நடிகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியீடு
மேலும் இன்றைய தினம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 3வது படமாக இந்த படம் உருவாகியுள்ளது. அருவி ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.