Don't Miss!
- News
"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உன்னதமான மனிதரை இழந்துவிட்டோம்…என் பிறந்தநாளை நான் எப்படி கொண்டாட முடியும்.. வடிவேலு உருக்கம் !
சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போலவே அனைவரையும் தனது திறமையால் உடல் அசைவுகளாலும் முகத்தாலும் சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு பாலாஜி.
வடிவேலுவை போலவே இருப்பதால் இவரை அனைவரும் வடிவேலு பாலாஜி என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கி விட்டனர்.
யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா போன்ற என்ன படங்களில் இவர் நடித்துள்ளார்.
மனைவியுடன் சேர்ந்து ஆட ஆசைப்பட்ட வடிவேல் பாலாஜி.. நிறைவேறாமலே போயிவிட்டார்.. நடிகர் உருக்கம்!

செயல் இழந்த உறுப்புக்கள்
கடந்த 15 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு பாலாஜி, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுதே கைகால்களும் செயல் இழந்ததாகவும் கூறுகின்றனர்.

பலன் இல்லாமல் போனது
பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட வடிவேலு பாலாஜி ,நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் இறந்த செய்தியைக் கேட்ட அனைவரும் பேர் அதிர்ச்சியிலும் ,ஆழ்ந்த தூக்கத்திலும் மூழ்கியுள்ளனர்.

அழ வைத்து விட்டார்
அனைவரையும் சிரிக்க வைத்த மனிதன் இன்று அனைவரையும் அழ வைத்து போய் விட்டாரே என்று சொல்லாத ஆட்களே கிடையாது. அந்த குழந்தைகள் தன் தந்தையின் முகத்தைப் பார்த்து அழும் காட்சியை பார்த்த அனைவரும் சுக்குநூறாக உடைந்து போய் உள்ளனர் .

ஆனாலும் பலனில்லை
பல சினிமா நட்சத்திரங்களும், தொலைக்காட்சியில் அவருடன் வேலை செய்யும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருவதுடன், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படிப்புச் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நெஞ்சம் பதறுது
நடிகர் வடிவேலு பாலாஜியின் உடலைப் பார்த்தவர்கள் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அனைவரும் நெஞ்சில் துடித்து அழுது கொண்டிருக்கின்றனர். வடிவேலுவின் நடை, உடை, பாவனைகளை கொண்டுள்ள வடிவேல் பாலாஜி இறந்த செய்தி கேட்டு நடிகர் வடிவேலு தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார்.

ஆழ்ந்த இரங்கல்
தனது சாயலில் இருக்கும் ஒரு உன்னதமான நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என்று வடிவேலுவும் உருக்கமாக பதிவை கொடுத்துள்ளார். நாளை வடிவேலுவின் பிறந்தநாள்,அவரது சாயலில் இருக்கும் ஒரு நல்ல மனிதன் இறந்த பிறகு , எப்படி பிறந்த நாளை நாம் கொண்டாட முடியும் என்றும், இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் கிடையாது என்றும் வருத்தத்தோடு வடிவேலு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.