Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நேரமே சரியில்லை: மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்ட வடிவேலு
அரசியல் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாறுமாறாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் வடிவேலு. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வர தேமுதிக எதிர்கட்சியானதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி 2 ஆண்டுகளாக மதுரையில் இருந்தார்.
இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்தார். அந்த படத்தை ஒழுங்காக திட்டமிடாததால் ஒரே குளறுபடியாம். முதலில் படத்தை ஒளிப்பதிவு செய்த சகாதேவன் ஷூட்டிங்கில் நடந்த குளறுபடிகளால் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.
அடுத்ததாக கோபிநாத் வந்தார் அவரும் வந்தவேகத்தில் சென்றுவிட்டார். மூன்றாவதாக விஜய் மில்டன் ஒளிப்பதிவை கவனிக்க வந்தார். என்ன நடந்ததோ அவரும் சென்றுவிட்டார். இதனால் தற்போது ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் திணறுகிறார்களாம். இதையெல்லாம் பார்த்த வடிவேலு அப்செட்டாகி மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டாராம்.