Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சக நடிகர்கள் செய்த ரூ. 7 கோடி மோசடி-கமிஷனரிடம் வடிவேலு புகார்
நடிகர் வடிவேலுவுடன் நடிக்கும் சில துணை நடிகர்கள் நிலம் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக ரூ. 7 கோடிப் பணத்தை மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் பரபரப்பு புகார் எழுந்தது.
சுடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் உள்பட பல மோசடியான இடங்களை போலி பத்திரங்கள் மூலம் இவர்கள் வடிவேலுவுக்கு வாங்கி்க் கொடுத்து மோசடி செய்து விட்டதாக வடிவேலு கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.
விரைவில் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுப்பேன் என்றும் வடிவேலு கூறியிருந்தார்.
போலிப் பத்திரங்கள் மூலம் வடிவேலு ஏமாந்த கதை, சமீபத்தில் அவருடைய வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போதுதான் அவருக்கே தெரிய வந்ததாம்.
இந்த நிலையில் இன்று மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வடிவேலு புகார் கொடுத்தார். அதில், போலி நில பத்திரம் மூலம் என்னிடம் 7 கோடி மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவட வேண்டும் என்று கோரியுள்ளார் வடிவேலு.
வடிவேலுடன் பல காலமாக உடன் நடிக்கும் ஒரு முக்கியத் துணை நடிகர் மீதுதான் பலமான புகார் எழுந்துள்ளது. இவரது மகன் கூட சமீபத்தில் ஹீரோவானார். அவர் நடித்த முதல் படத்துக்குக் கூட வடிவேலு பண உதவி செய்து உதவியதாக கூறப்படுகிறது.