Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சக நடிகர்கள் செய்த ரூ. 7 கோடி மோசடி-கமிஷனரிடம் வடிவேலு புகார்
நடிகர் வடிவேலுவுடன் நடிக்கும் சில துணை நடிகர்கள் நிலம் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக ரூ. 7 கோடிப் பணத்தை மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் பரபரப்பு புகார் எழுந்தது.
சுடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் உள்பட பல மோசடியான இடங்களை போலி பத்திரங்கள் மூலம் இவர்கள் வடிவேலுவுக்கு வாங்கி்க் கொடுத்து மோசடி செய்து விட்டதாக வடிவேலு கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.
விரைவில் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுப்பேன் என்றும் வடிவேலு கூறியிருந்தார்.
போலிப் பத்திரங்கள் மூலம் வடிவேலு ஏமாந்த கதை, சமீபத்தில் அவருடைய வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போதுதான் அவருக்கே தெரிய வந்ததாம்.
இந்த நிலையில் இன்று மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வடிவேலு புகார் கொடுத்தார். அதில், போலி நில பத்திரம் மூலம் என்னிடம் 7 கோடி மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவட வேண்டும் என்று கோரியுள்ளார் வடிவேலு.
வடிவேலுடன் பல காலமாக உடன் நடிக்கும் ஒரு முக்கியத் துணை நடிகர் மீதுதான் பலமான புகார் எழுந்துள்ளது. இவரது மகன் கூட சமீபத்தில் ஹீரோவானார். அவர் நடித்த முதல் படத்துக்குக் கூட வடிவேலு பண உதவி செய்து உதவியதாக கூறப்படுகிறது.